www.idhuthanislam.com

விரும்பியவர்களுக்கு அனுப்ப....     முதல் பக்கம்
 

இந்தியச் சிறைகளில் நிரம்பி வழியும் முஸ்லிம்கள்.

                நன்றி:சமநிலைச் சமுதாயம்        அச்சாக்கம்: நஹ்லி                 

 

முஸ்லிம்களின் மக்கள் தொகைக்குத் தகுந்தாற்போல் கல்வி வேலை வாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு கேட்டு போராடி வரும் முஸ்லிம்களுக்கு, சிறைச்சாலைகளில் மட்டும்தான் தாராளமாக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது என்று அதிர்ச்சியூட்டும் புள்ளி விபரங்கள் வெளியாக்கியுள்ளன.

  ''இந்தியாவின் அதிகமான மாநிலங்களில் பிற சமூகத்தவரைவிடவும் முஸ்லிம்கள்தான் அதிக எண்ணிக்கையில் சிறைகளில் நிரப்பப்பட்டிருக்கிறார்கள்'' என்று தேசிய அளவில் முஸ்லிம்களது சமூக, அரசியல், பொருளாதார நிலைபற்றி ஆய்வுசெய்து வரும் நீதிபதி ராஜீந்தர் சச்சார் கமிட்டி தனது இடைக்கால அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

  மேற்கு வங்கம் உபி பிஹார் மற்றும் ஆந்திரம் போன்ற மாநிலங்களில் வாழும் முஸ்லிம்களின் நிலவரம் குறித்த அறிக்கை இன்னும் வெளிவராத சூழ்நிலையில் சுமார் 8 மாநிலங்களின் புள்ளி விபரங்களை மட்டும் அக்கமிட்டி வெளியிட்டுள்ளது

  அதே நேரம் ஜம்மு காஷ்மீர் போன்ற முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களின் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  முஸ்லிம் மக்கள் தொகை 10.6 சதவீதம் உள்ள மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் பிற மக்களை விட முஸ்லிம்கள் சிறைகளில் கழிக்கும் காலங்கள் மிகவும் அதிகமாகும். மேலும் அம்மாநிலத்திலுள்ள மொத்த சிறைவாசிகளில் 32.4 சாதவீதம் பேர் முஸ்லிம்கள்.

  நடப்பு வருடத்தில், மஹாராஷ்டிராவில் சிறையில் அடைக்கப்படவர்களில் முஸ்லிம்கள் தான் மிக அதிக எண்ணிக்கையில் உள்ளார்கள். 40.6 எனவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

  குஜராத் மாநிலத்திலுள்ள முஸ்லிம்கள் நிலை குறித்து சொல்லவே வேண்டியதில்லை.

  அங்குள்ள முஸ்லிம் மக்கள் தொகை 9.06 சதவீதம். ஆனால், அம்மாநிலத்திலுள்ள வொவ்வொரு சிறையிலும் அடைக்கப்பட்டள்ள கைதிகளில் 4லில் 1 பங்கு முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  ஜம்வு காஷ்மீரை அடுத்து இந்திய அளவில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மாநிலம் அஸ்ஸாம். அங்க முஸ்லிம்களின் எண்ணிக்கை 30.9 சதவீதம். அங்குள்ள மொத்த சிறைவாசிகளில் முஸ்லிம்கள் 28.1 சதவிகிதம் பேர் எனக் குறிப்பிட்டுள்ளது சச்சார் குழு.                           

  பிற மாநிலங்களை காட்டிலும் முஸ்லிம்களுக்கு அதிகமாக வேலை வாய்ப்புகளை வழங்கி வரும் கர்நாடகாவில் முஸ்லிம்கள் 12.23 சதவிகிதம் உள்ளனர். அம்மாநிலத்தின் நிலவரப்படி மொத்த சிறைவாசிகளில் 17.5 சதவிகிதம் பேர் முஸ்லிம்களாவார்.

  இதற்குத் தகுந்தார்போல் தேசிய அளவில் 28  சதவிகிதம் உள்ள முஸ்லிம்கள் உள்ளனர். மொத்த இந்தியர்களில் வறுமையில் வாடும் முஸ்லிம்கள மட்டும் 44  சதவிகிதம் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

  ''முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள். அவர்கள் தான் தீவிரவாதச் செயல்களை உருவாக்குகிறார்கள் என்கிற  அழுத்தமான  நம்பிக்கை உளவுத்துறை மற்றும் காவல்துறையினரிடம் திணிக்கப்பட்டுவிட்டது. இதனால் முக்கியத்துவம் இல்லாத -சாதாரண விஷயங்களுக்கெல்லாம் முஸ்லிம்கள் இளைஞர்களை அதிக அளவில் கைது செய்கிறார்கள். ஆனால் அது சம்பந்தமான எந்தக் குற்றத்தையும் நிரூபிக்க முடியாமல் திணறுகிறார்கள்". என்று முன்னால் எம்பியும், முஸ்லிம் ஆலோசனக்குழுவின் தலைவருமான ஸையத் ஷஹாபுத்தீன் கூறுகிறார்.

  உலகில் மிகப்பெரும் ஜனநாயக நாடுகளின் வரிசையில் முன்னியில் உள்ள நமத இந்திய தேசத்தில் கூட கேட்பாரற்ற சமூகமாகத்தான் முஸ்லிம்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

  கடந்த முப்பது ஆண்டுகளாக தேசிய அளவில் முஸ்லிம்களுக்கென்று சொல்லிக் கொள்ளும் படியான கட்சியோ, தலைமையோ இல்லாதிருப்பதே அவர்களுக்கு ஏற்பட்ட மாபெரும் சோதனைகளில் முக்கியமானதும், முதன்மையானதுமாகும்.

  இந்த முதன்மைத் தேவையை நிவர்த்தி செய்ய இயலாமல் விழிப் பிதுங்கி நிற்கும் இரண்டு தலைமுறையினரை ஆருதல் படுத்த முடியாமல் யார் யாரையோ சார்ந்திருக்கும். அவல நிலைக்கு இந்திய முஸ்லிம்கள் தள்ளப்பட்டிருப்பது வேதனையிலும் வேதனை சர்வ தேச அளவில் இஸ்லாமியர்களை தீவிர வாதத் தோடு முடுச்சு போட்டு எழுதி பழகப்படுத்தப்பட்டிருக்கும் சார்பு ஊடகத்துறையின் இந்திய முஸ்லிம்களையும் விட்டு வைக்கவில்லை.

 இதைக் காரணமாகக் கொண்டே பல தேச துரோகிகள் வன்முறைகளையும் குண்டு வெடுடிப்புகளையும் நிகழ்த்தி விட்டு முஸ்லிம்கள் மீது பழி சுமத்தித் தப்பி விடுகிறார்கள் என்று சந்தேகம் எழுப்பப்படுகிறது. இதனால் பாவம் ஒரு பக்கம் பழி இன்னொரு பக்கம் என்ற கதையாக அதற்கான தண்டனை அனுபவிக்கும் குற்றப் பரம்பரையாக முஸ்லிம்கள் சித்திரிக்கப்பட்டு வருகிறார்கள்.

 இதிலும் கொடுமை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் இளைஞர்கள் உடல் மற்றும் மனரீதியாக பல்வேறு விதமான துன்புறுத்தலுக்கும் மன உலைச்சலுக்கும் ஆளாக்கப்பட்டு எதிர்காலமே இருண்ட நிலைக்கு தள்ளப்பட்டு விடுவதுதான்.
பெங்களுர் விஞ்ஞானக் கூடம், தில்லி, வாரணாசி மற்றும் மும்பை குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு காரணமான உண்மைக் குற்றவாளிகள் இதுவரைப் பிடிப்பட்டதாகத் தெரியவில்லை. இது சம்பந்மாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அனைவரும் முஸ்லிம்கள் அதிலும் இளைஞர்கள்.

 ஒருபக்கம் செய்யாத தவறுகளுக்காக அநியயாயமாக சிறைச்சாலைகளில் தண்டிக்கப்படுகிறார்கள் என்றால் இனபடுகொலை வன்முறைகள் உயிர்களையும் சொத்து சுகங்களையும் இழந்து சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டு அகதிகள் முகாம் என்ற மற்றொரு சிறை போன்ற இடங்களில் வாடிக் கொண்டிருப்பது முஸ்லிம்கள் தான்.

 இப்போதெல்லாம் மும்பை சிவப்பு விளக்கு பகுதியில் முஸ்லிம் பெண்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பது இரத்தத்தை உறைய வைக்கும் மற்றொரு செய்தியாகும் காரணம் தங்கள் குடும்பத்தின் பொருளாதார பாலமாக திகழ்ந்த தந்தை மற்றும் சகோதரர்கள் கணவர்கள் யாவரும் சிறைச்சாலைகளில் அடக்கப்பட்டிருப்பதுதான். அவர்களை நம்பி இருந்த இளம் பெண்கள் சிறுவர்கள் வாழ்வாதாரத்திற்கு வேறு வழி இல்லாமல் பலவந்தமாக அப்பகுதியில் திணிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது ஒரு ஆங்கில நாளிதழ்.

 மேலும் வறுமையின் உச்சிக்கு சென்று பசியிலும் பட்டினியிலும் கிரங்கிப்போய் உயிர் வாழ பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் "கல்வியாவது மண்ணாங்கட்டியாவது" என்ற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ள முஸ்லிம்கள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அதிக அளவில் உள்ளார்கள். இது இந்திய முஸ்லிம்கள் அனைவரின் எதிர்காலமும் கரு இருளில் தள்ளப்பட்டிருக்கிறது என்பதற்கு சத்தியமான சான்றாகும்.

 குறைந்தப்பட்சம் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் விடுவிக்கப்பட்டாலே பல ஆயிரம் முஸ்லிம் குடும்பங்கள் பசியிலிருந்தாவது மீளும் என்பது நிச்சயம்.

 இதுபோன்ற சமூக கொடுமைகளை எதிர்கொள்ளவும் முஸ்லிம்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கான திட்டங்கள் எது குறித்தும் தூர நோக்கோடு யோசிக்காமலும் 25 கோடி முஸ்லிம்கள் வெறும் செம்மரி ஆட்டு மந்தைப் போல உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கும் கோழைத்தனத்தை என்னவென்பது?

 பரந்து விரிந்த இந்திய நாட்டில் எங்கெல்லாம் அசம்பாவிதங்கள் நடக்கின்றனவோ அங்கெல்லாம் முஸ்லிம் இளைஞர்கள் தான் தவறாமல் கைது செய்யப்படுகிறார்கள். பாதிக்கப்படுவதும் தண்டனை அனுபவிப்பதும் அவர்களே என்கிற போது செத்து மடிவது மேலாகத் தோன்றும்.

 இருண்டக் காலத்தின் குருட்டு வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த அகில உலக மக்களுக்கும் வெளிச்சம் காட்டி நேரான வழியில் முன்னின்று அழைத்து சென்றதோடு அவர்களுக்கு மனித நாகரீகத்தையும் பண்பாட்டையும் கற்று கொடுத்த இஸ்லாமியர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இன்றைய நிலையை நினைக்கும் போது பரிதாபப்படாமல் இருக்க முடியவில்லை.

 "எந்த சமூகம் தங்களைத் தாங்களே மாற்றி அமைத்துக் கொள்ளவில்லையோ அந்த சமூகத்தை இறைவனும் மாற்ற போவதில்லை" எனும் இறை வசனத்தின் போதனையை மனதில் கொண்டு சமுதாயத்தின் அனைத்து மட்டத்திலும் முன்னேறுவதற்கு தேவையான உருப்படியான ஆரோக்யமான மாற்றம் குறித்த சிந்தனைக்கு முன்வருவார்களா முஸ்லிம்கள்?
 

தமிழ் இஸ்லாமிய செய்தி ஊடகத்தின் உலக வலை