|
தி வாஷிங்டன் போஸ்ட்
பத்திரிக்கையில் சமீபத்தில் பிரிட்டனைச் சேர்ந்த
சகோதரி யுவான் ரிட்- ஊழுதிய கட்டுரை
அது.
இனி
அவரது சொந்த
நடையில்.
ஆ.ர்
""நான் தாலிபான்களால்
சிறைப் பிடிக்கப்படும் வரை புர்கா
அணிந்த பெண்களை மிகவும் ஒடுக்கப்பட்ட
படைப்பினமாகவே கருதி வந்தேன்.
செப்டம்பர் 2001ல் அமெரிக்காவில்
பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று சற்றே 15 நாட்களுக்குப்
பிறகு நீல நிற புர்காவில் என்னை
மறைத்துக் கொண்டு அப்கானிஸ்தான் எல்லையைக்
கடந்து உள்ளே புகுந்தேன்.
தாலிபான்களின் கொடுமையான
ஆட்சியில் சராசரி மனித
வாழ்க்கையைப் பற்றி நான் பணியாற்றிய பத்திரிகைக்கு
செய்திகள் திரட்டுவது என் ல
ரகசிய திட்டம். ஆனால் நான்
கண்டுபிடிக்கப் பட்டு கைது செய்யப்பட்டு,
பத்து நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டேன்.
என்னைக்
கைது செய்தவர்கள் முகத்தில் துப்பினேன்.
ஆக்ரோஷமாக
எதிர்த்தேன்.
அதனால்
அவர்கள் என்னை
ஒரு "கெட்டப் பெண்'
என்று அழைத்தார்கள்.
ஆனால் நான் குர்ஆனைப்
படிப்பதாகவும்,
இஸ்லாத்தைப் பற்றி தெரிந்து
கொள்ளப் போவதாகவும் வாக்களித்த பிறகு
என்னை விடுதலை செய்து
விட்டார்கள். (உண்மையைச்
சொல்லப் போனால் நான் விடுதலையானபோது யார்
மகிழ்ந்தார்கள் என்று
எனக்கு சொல்லத் தெரியவில்லை
நானா? அல்லது
அவர்களா?).
எனது
சொந்த ஊரான லண்டன்
திரும்பிய பிறகு நான் தாலிபான்களுக்கு
அளித்த வாக்குறுதியைக்
காப்பாற்றுவதற்காக இஸ்லாத்தைப்
பற்றி அறியத் துவங்கினேன்.
நான் படிக்கப் படிக்க இனம்புரியாத
ஆச்சரியம்
என்னை ஆட்கொள்ளத்
துவங்கியது. குர்அனில் நான் மனைவிமார்களை
எப்படி
அடிப்பது என்றும்,
மகள்களை எப்படி
அடக்கி
ஒடுக்கி துன்புறுத்துவது என்றும்
ஆண்களுக்கு
உபதேசிக்கும் வசனங்கள்
இருக்கும்
என்று எதிர்பார்த்தேன்.
ஆனால் பெண்ணின விடுதலையை
ஒங்கி ஒலிக்கும் திருக்குர்ஆனின்
நல்லுபதேசங்களைக் கண்டு திகைத்துப் போனேன்.
எனது கைதுக்குப் பிறகு
இரண்டரை வருடங்கள் கழித்து
நான் இஸ்லாமை
எனது வாழ்வியல் நெறியாக
எற்றுக் கொண்டேன். எனது
இந்த மாற்றம்
எனது உறவினர்கள்
மற்றும் நண்பர்கள் மத்தியில் திகைப்பு,
எமாற்றம்,
உற்சாகம் போன்ற
உணர்வுகளின் கலவையான
நிலைமையை உண்டு பண்ணியது.
அன்று!
மத நல்லிணக்கத்திற்கு
இடையூறாக
இருக்கிறது
என்று முஸ்லிம்
பெண்களின் முகத்திரையைப் பற்றி பிரிட்டனின் முன்னாள்
வெளியுறவுத்துறை அமைச்சர்
ஜாக்ஸ்டிரா விமர்சனம் செய்திருப்பது
என்னை ஏமாற்றமும்,
அச்சமும் கொள்ள வைக்கிறது.
அவருக்கு பிரிட்டனின்
பிரதமர் டோனி பிளேர்,
எழுத்தாளர் சல்மான் ருஷ்டி
மற்றும் இத்தாலியப்
பிரதமர் ரெமானோ ப்ரோடி ஆகியோர்
வேறு ஆதரவளிக்கின்றனர்
என்பதுதான் வேடிக்கையான
வேதனை.
புர்காவுக்கு வெளியேயும்,
உள்ளேயும்
இரண்டு மாறுபட்ட வாழ்க்கை
முறையை உணர்ந்த
ஒரு பெண்
என்ற அடிப்படையில்
சொல்கிறேன்: இஸ்லாமிய
உலகில் வாழ்கின்ற முஸ்லிம்
பெண்களின் அடக்குமுறையைப்
பற்றி ஆரவாரமாக
கவலைப்படுகிற கிட்டத்தட்ட அனைத்து
மேற்கத்திய அரசியல்வாதிகளும்
சரி, பத்திரிக்கையாளர்களும்
சரி இஸ்லாத்தைப் பற்றியும்,
அது பெண்களுக்கு
வழங்கியுள்ள உரிமைகள்
பற்றியும் ஒன்றுமே
தெரியாதவர்களாகத்தான் இருக்கின்றார்கள்.
ஹிஜாபைப் பற்றியும்,
பருவமடையாத மணப்பெண்கள் பற்றியும்,
பெண்கள் கத்னாவைப் பற்றியும்,
கௌரவக் கொலைகளைப் பற்றியும்.
கட்டாயத் திருமணங்கள் பற்றியும் அவர்கள்
சகட்டுமேனிக்கு எழுதியும்
பேசியும் வருகிறார்கள். அந்த
வன்கொடுமைகள் அத்தனைக்கும்
அவர்கள்
இஸ்லாத்தைக் குற்றவாளி ஆக்குகின்றார்கள்.
அவர்களது
இந்த வெறித்தனமானப் போக்கு
அவர்களது
அறியாமையைத் தான்
பறைசாற்றுகின்றது.
மேற்கண்ட வெறுக்கத்தக்க விஷயங்கள்
கலாச்சாரம் மற்றும் சமூக சடங்கு சம்பிரதாயங்களுக்கு
உட்பட்டவை.
அவற்றுக்கும்
இஸ்லாத்திற்கும்
எள்ளளவும் சம்பந்தம்
இல்லை. திருக்குர்ஆனை
கருத்தூன்றிப் படித்தால் ஒர் உண்மை
விளங்கும். மேற்கத்திய பெண் விடுதலைப் போராளிகள்
1970களில் போராடி பெற்ற அனைத்துப்
பெண்ணிய உரிமைகளும் 1400
வருடங்களுக்கு முன்னரே முஸ்லிம்
பெண்மணிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இஸ்லாமியப்
பெண்கள்
ஆன்மிகத்திலும், கல்வியிலும்,
சொத்துரிமையிலும்
ஆண்களுக்கு நிகரான
உரிமைப் பெற்றுத்
திகழ்கின்றனர்.
ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து
அதனை
சரிவர வளர்க்கும் பெண்மணி பெரும் பாக்கியம்
நிறைந்தவளாகக் கருதப் படுகின்றாள்.
இவ்வாறு
இஸ்லாம் பெண்ணினத்திற்குத் தேவையான
எல்லாவற்றையும் வழங்கி மேன்மைப்படுத்தி
இருக்கும்போது,
இந்த மேற்கத்திய
ஆண்கள்
ஏன் முஸ்லிம் பெண்களின்
ஆடை
விஷயத்தில் மட்டும் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்?
பிரிட்டிஷ்
அரசின்
அமைச்சர்களான கோர்டன் பிரவுன்
மற்றும் ஜான் ரீட் அகியோர் முஸ்லிம் பெண்களின்
முகத்திரையைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்துள்ளனர்.
அதில் வேடிக்கை
என்னவென்றால்,
அவர்கள்
இருவருமே
ஆண்கள்
கூட பாவாடை
அணியும் ஸ்காட்லாந்து நாட்டு
எல்லையோரத்தைச் சேர்ந்தவர்கள்.
நான்
இஸ்லாத்திற்கு மாறி முக்காடு
அணியத் துவங்கியபோது
மிகப்பெரிய
அளவில் விளைவுகளை
எதிர்கொள்ள நேரிட்டது.
நான் செய்ததெல்லாம்
எனது தலையையும், தலைமுடியையும்
மூடிக் கொண்டேன்
அவ்வளவுதான்.
ஆனால்
உடனே நான்
இரண்டாந்தர குடிமகளாக்கப்பட்டேன்.
ஏதோ கொஞ்சம்
இஸ்லாமிய
எதிர்ப்புணர்வுகளை சந்திக்க வேண்டியிருக்கும்
என்று நினைத்திருந்தேன்.
ஆனால்
அனைத்துத் தரப்பு
மக்களிடமிருந்தும்
இந்தளவிற்கு
இனவெறியை நான்
எதிர்பார்க்கவில்லை. "வாடகைக்கு'
என்ற வாசகத்தடன்
என்னைக் கடந்து சென்று நின்ற டாக்ஸியிலிருந்து
ஒரு
வெள்ளைக்காரப் பெண்
இறங்கினாள். நான்
அந்த டாக்ஸியில்
ஏறுவதற்காக
எத்தனித்தேன்.
அனால்
என்னைக் கூர்ந்து
கவனித்த டிரைவர்
என்னை நிராகரித்து விட்டு
விருட்டென்று காரை ஒட்டிச் சென்று விட்டான். மற்றொரு
டாக்ஸி டிரைவரோ
என்னிடம் "பின் ஸீட்டில் வெடிகுண்டு
எதையும் வைத்து விட்டுப் போய்விடாதே'
என்றும்
"பின்லேடன்
எங்கே
ஒளிந்து
இருக்கிறான் தெரியுமா?'
என்றும் கமெண்ட்
அடித்தான்.
அம்! பெண்கள் கண்ணியமாக
உடை
உடுத்த வேண்டும்
என்பது
ஒர் இஸ்லாமியக் கடமை. நான்
அறிந்தவரை பெரும்பான்மையான
முஸ்லிம் பெண்கள் ஹிஜாப்,
அதாவது முகம் மட்டும்
வெளியில் தெரியும் வண்ணம்
ஆடை
அணிகின் றனர். வெகு
சிலரே முகத்தையும் மறைக்கும் நிகாப்
எனும் முகத்திரை
அணிந்து வெளியில் வருகின்றனர்.
என்னைப் பொறுத்த வரை,
ஒரு முஸ்லிம் பெண் கண்ணியத்திற்காக ஹிஜாப்
அணிகிறாள்.
அவளுக்கு
அந்த கண்ணியத்தைக் கொடுத்து விட்டுப்
போங்களேன். வால் ஸ்டிரீட்டில்
இயங்குகின்ற
ஒரு
வங்கியின்
அதிகாரி தன்னை
ஒரு சீரியஸ் பிஸினஸ்மேனாக
பிறர் கருத வேண்டும்
என்பதற்காகத்தானே கோட் சூட்
அணிகிறார்!
அதுபோலத்தான்
இதுவும்.
நான்
ஒரு நேரத்தில் மேற்கத்திய பெண்ணியவாதியாகத்தான்
இருந்தேன். அனால் பிறகுதான்
உணர்ந்தேன். முஸ்லிம்கள்
பெண்ணியவாதிகள் பிறரைவிட மிகத் தீவிரமாக பெண்
விடுதலைக்காக போராடக் கூடியவர்கள்
என்று!
அநாகரீகமான
அழகிப் போட்டிகளை நாம் வெறுக்கின்றோம்.
ஆனால் நமக்கு
எரிச்சலூட்டும் விதமாக 2003ல் நடந்த பிரபஞ்ச
அழகிப்
போட்டியில்
ஆப்கானிஸ்தானிய பெண்
ஒருத்தி நீச்சல்
ஈடையில் பங்கேற்ற நிகழ்ச்சியை
அந்தப் போட்டியின்
நடுவர்கள்
இஸ்லாமியப் பெண்களின் விடுதலைக்கான
ஆரம்பம்
இது
என்று வர்ணித்தனர்.
ஹிஜாப்
அணிவது சமூக
உறவைப் பேணுவதற்கு மிகவும் தடையாக
இருக்கிறது
என்று
இத்தாலியப் பிரதமர் ப்ரோடி
கூறியிருக்கிறார்.
அந்த முட்டாள்தனமான வாதத்தைக்
கேட்கும்போது
எனக்கு
அழுவதா
அல்லது சிரிப்பதா?
என்று
தெரியவில்லை.
அவர் சொல்வது சரியென்றால்
இன்றைய விஞ்ஞான
யுகத்தில் நாம்
அன்றாடம் ஈபயோகிக்கும் செல்போன், சாதா
போன், பேக்ஸ்,
S.M.S. தகவல்கள் மற்றும்
ரேடியோ
'ஆகியவை
அர்த்தமற்றவையாகி விடும்.
இந்த
உபகரணங்களை தொடர்பில்
இருப்பவர்களின் முகத்தைப்
பார்த்துக் கொண்டா நாம்
உபயோகிக்கிறோம்?
இஸ்லாத்தின் கீழ் நான் மதிக்கப்படுகின்றேன்.
எனக்குத்
திருமணம்
ஆகியிருந்தாலும்,
ஆகாவிட்டாலும்
எனக்கு
கல்வி கற்க
உரிமை
உண்டு
என்றும். கல்வியைத் தேடிப்பெற
வேண்டியது
எனது கடமை
என்றும்
இஸ்லாம்
எனக்கு சொல்லித்
தருகின்றது.
.இஸ்லாத்தின்
எந்த கட்டமைப்பிலும்
பெண்களாகிய நாங்கள்
ஆண்களுக்கு சமைப்பது, துவைப்பது,
சுத்தம் செய்வது போன்ற சேவகங்கள் செய்துதர வேண்டும்
என்று கட்டளையிடப்படவே
இல்லை.
இன்னும் சொல்லப் போனால் பெண்களுக்கெதிரான
வன்கொடுமைகள்
ஒரு குறிப்பிட்ட மதத்தையோ,
இனத்தையோ
அல்லது தேசத்தையோ சார்ந்தது
அல்ல.
அது மதம் மொழி
இனம் கலாச்சாரம்
ஆகிய
அனைத்தையும் கடந்து பெண்ணினத்தை
பாதித்து வரும் ஒர்
உலகளாவிய பிரச்சினையாகும்.
உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால்...
National Domestic Violence Survey
நடத்திய அய்வில்
அமெரிக்காவில் 12 மாத கால
அளவில் 4
மில்லியன் பெண்கள்
ஆண்களது கொடுமைக்குள்ளாகி
வருகின்றனர். மேலும்
ஒரு நாளில் மட்டும் 3 பெண்கள்
தங்களது காதலன்
அல்லது கணவனால் கொல்லப்பட்டு
வருகின்றனர்.
ஆண்கள் தங்கள் மனைவிமார்களை கைநீட்டி
அடிக்க
அனுமதிக்கிறது
இஸ்லாம்
என்ற கூற்றை
எடுத்துக் கொண்டால்
அது முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப்
பட்டுள்ளது.
இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள்
அடிக்கடி
குர்ஆன் வசனங்களையும் நபிமொழி குறிப்புகளையும்
மேற்கோள் காட்டுகின்றனர்.
ஆனால்
அந்த வசனங்கள் மற்றும்
நபிமொழிகளின்
உள்ளர்த்தங்களை தவறாக விளங்கிக்
கொள்வதால் எற்படும் விளைவுதான்
அது. ஒர்
ஆண் தனது
மனைவியை
அடிக்கத்தான் வேண்டுமாயின்
அவளது
உடலில்
எவ்விதக் காயமோ
அடையாளமோ
இல்லாமல்தான்
அடிக்க
வேண்டும்
என்று குர்ஆன் சொல்கிறது.
அது குர்அனுக்கே
உரிய தனித்துவமிக்க சொல்லாளுமையாகும்.
அதன்
உள்ளர்த்தத்தை நெருக்கமாகச் சொல்லப் போனால்...
முட்டாளே!
உனது மனைவியை
அடிக்காதே!! ஊன்பதுதான்.
அதற்கு மேலும்
இஸ்லாம் பெண்களை
அடிமைப்படுத்தி
வைக்கிறது
என்று வாதிடுவோர்களின் கவனத்திற்கு
ஒன்றைச்
சொல்கிறேன்:
அமெரிக்காவின்
ஆன்மீகக் குரு ரெவரண்ட்
பேட் ராபெர்ட்ஸன் 1992ல் கூறிய கருத்து
இதோ: ""பெண்
விடுதலை
என்பது சமூக சீர்கேட்டை
உருவாக்கி குடும்ப
பாரம்பரியத்தை சீர்குலைத்து கணவர்களை விட்டு
ஒடுகின்ற தங்கள் குழந்தைகளைக் கொல்கின்ற ஒரினச்
சேர்க்கையில் பெண்களை
ஈடுபடுத்துகின்ற ஒர்
ஆயத்தமாகும்''.
இப்போது சொல்லுங்கள்! யார்
நாகரீகமானவர்கள்? யார் நாகரீகமற்றவர்கள்?
என்று.''
(சகோதரி யுவான் ரிட்- லண்டனில்
இயங்கும்
இஸ்லாம் சேனல்
தொலைக் காட்சியின்
அரசியல்
எடிட்டர் மற்றும்
"In
the Hands of Taleban: Her Extra ordinary Story
என்ற நூலின்
இணையாசிரியர்
ஆவார்.
இந்த நூலாசிரியரை
hermosh@aol.com
என்ற இமெயி-ல் தொடர்பு
கொள்ளலாம். மேலும் 2001ம் வருடம்
அவர் தாலிபான்களிடம்
சிக்கி
இஸ்லாத்தின் மீது
ஆர்வம் கொள்ள வைத்த சுவையான
சம்பவம் குறித்து
அவரது நேரடி பேட்டி
அப்போது "நியூஸ்
வீக்' பத்திரிக்கையில் பரபரப்பாக வெளியாகி
இருந்தது)
நன்றி: மக்கள் உரிமை
* mjd; jkpohf;fj;ij fhz ,q;F fpspf; nra;aTk;.
http://www.tamilmuslim.com/Manamadram/ridley.htm
|